Friday 9 September 2011

பாளை.,யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் (திருநெல்வேலி ) - தினமலர்

திருநெல்வேலி :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாளை.,யில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பாளை., ஜவகர் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகிழ்ச்சி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வரதராஜன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment