நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்தும் , தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரிய கோவை மாவட்டத்தை சேர்ந்த பத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் . நிர்வாகம் தொடர்ச்சியாக தொழிலாளர் மீது பழிவாங்கும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
பழி வாங்கும் போக்குகளை நிர்வாகம் கைவிட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கோவை மாவட்ட 108 ௦ ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை எந்த விதமான நிபந்தனையும் இன்றி வேலைக்கு சேர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசும் ஜி.வி.கே வின் இந்த எதேசதிகாரபோக்கை கண்டிக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு ஜி.வி.கே வின் சட்டவிரோத போக்குகளை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கொண்டு செல்லும்.
No comments:
Post a Comment