Friday 23 December 2011

உயிரை கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் ஜி.வி.கே.


தேசிய நெடுஞ்சலைகள் திறக்கப்பட்ட பின்பு வாகனங்கள்  கட்டுப்பாடு  இல்லாமல் வேகாமாக  பயணிக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகமாகி விட்டன. விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை  அளிக்கப்படுமானால் அவர்களின் பொன்னான உயிர்கள் காக்கப்படும். அந்த அரும்பணியில் மலையிலும், வெயிலினிலும் , கடும் குளிரிலும் கடமை தவறாமல் பணிபுரிபவர்கள் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். அவர்களுக்கு வழங்கப்படுவது மிக குறைந்த ஊதியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியினை தொடர்வதற்கு சிறப்பு காரணம் என்னவென்றால் அவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணி தரும் நிறைவு தான். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இவ்வாறு மிகுந்த கடமை உணர்வோடும், சிரத்தையோடும், தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைக்கின்றனர். அந்த பலன்களை அறுவடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திற்கு மனசாட்சி என்பது ஒரு துளியும் கிடையாது. 

Tuesday 20 December 2011

HC notice to probe 108 ambulance service


 The Madurai bench of the Madras high court has ordered notice to the authorities on a plea to order an enquiry into alleged irregularities in the 108 ambulances service scheme. The bench comprising Justice K N Basha and Justice M Venugopal gave the directive to the principal secretaries of Health and Family Welfare, Transport and Home departments on a petition filed by one A Jeyaprakash Narayanasamy of Thoothukudi.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு : விசாரிக்ககோரி வழக்கு தலைமை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

800 கோடி இழப்பீடு 
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அனைத்து ஆம்புலன்ஸ் வேன்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கான காண்ட்ராக்டு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்க ராஜு (தற்போது ஜி.வி.கே ) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் மற்ற ஆம்புலன்சையும் சேர்க்கும் போது கான்ட்ராக்ட்டு அளிக்கப்பட்டுள்ள நபருக்கு வருமானம் குறைந்து விடும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது .