Thursday 5 January 2012

தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்க மறுக்கும் ஜி.வி.கே.


வேலை பார்க்கும் மகளிருக்கு பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறுமாதமாக உயர்த்தும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தப்படுகிறது.  ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காமல் லாபவெறி கொண்டு தொழிலாளர்களை சித்தரவதை செய்வதே தொழிலாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.கே நிறுவனம் முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது.

Wednesday 4 January 2012

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும்


அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. உயிர்காக்கும் பணியில் கண் அயராது பணிசெய்யும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு (பைலட் ,இ.எம்.டி, மற்றும் கால்  சென்டர் ஊழியர்கள்)  குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 108   ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிறப்பாக கொண்டாட அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும்.