அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. உயிர்காக்கும் பணியில் கண் அயராது பணிசெய்யும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு (பைலட் ,இ.எம்.டி, மற்றும் கால்
சென்டர் ஊழியர்கள்) குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிறப்பாக கொண்டாட அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும்.
ஆனால் லாபவெறி பிடித்த ஆந்திர நிறுவனமான ஜி.வி.கே. எந்தவிதமான போனஸும் இது வரை வழங்கியதில்லை. தன் கல்லாப்பெட்டி மட்டும் நிறைய வேண்டும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற இரக்கமற்ற
மனோபாவத்தை கொண்டிருக்கும் ஜி.வி.கே நிறுவனம் போனஸ் வேண்டும் என்ற தொழிலாளர்களின் குரலையும் அது மதிக்கப்போவதில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த பிரச்னையில் தலையிட்டு இந்த பொங்கலுக்கு போனஸ் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (108AWU) கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment