Friday 8 June 2012

20 நாள்களுக்குள் 108 ஆம்புலன்சில் உள்ள பழுதுகளை நீக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு


108 ஆம்புலன்ஸ் வண்டியில் பராமரிக்கவேண்டிய அத்தியாவசியமான உயிர் காக்கும் உபகரணங்கள்  உட்பட வண்டிக்கு ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தபோதும் போதும் ஜி.வி.கே.நிர்வாகம் எதையும் முழுவதுமாக சரிசெய்து தருவதில்லை. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு ஆம்புலன்சில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக 30 . 05 . 2012 அன்று அளித்தோம்.மனுவை ஏற்றுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி  ஒவ்வொரு ஆம்புலன்சில் உள்ள குறைகளை அறிய தனி கமிட்டி   போடப்பட்டு ஒவ்வொரு ஆம்புலன்சாக சென்று அந்த கமிட்டி ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தது.

Tuesday 5 June 2012

‘108' ambulance employees stage stir on 30.05.2012- the Hindu


AGITATION:‘108' ambulance staff staging a demonstration in Madurai.— Photo: S. James.
The members of 108 Ambulance Thozhilalar Sangam staged a demonstration near Collector's office here on Wednesday.
The agitators demanded enhancement of basic infrastructural facilities in the vehicles and also ensure welfare of all the staffs – particularly, those handling the emergency vehicles round-the-clock.
There were aplenty of anomaly in pay structure, they claimed and hence demanded uniform scale.

Saturday 2 June 2012

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் .