நமது சங்கத்தின் சட்ட ஆலோசகரும் , வழக்கறிஞருமான தோழர் த. சிவக்குமார் அவர்கள் மாணவர்களும் , சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக 1 . தீங்கியல் சட்டம் , 2 . சட்ட மொழி ,3 . வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் ,4 . இலவச சட்ட உதவி மற்றும் பொது நல வழக்காடுதல் , 5 . தொழிலாளர் மற்றும் தொழிற்சட்டங்கள், 6 . வரிவிதிப்பும் வரிச்சட்டங்களும் ஆகிய நூல்களை தமிழில் எழுதியுள்ளார் . தொடர்ந்து நல்ல தமிழில் சட்ட நூல்களை வெளியிட்டும் வருகிறார். அவரது எழுத்து பணியினை பாராட்டி 'சட்ட கதிர் மாத இதழ்' இந்தாண்டிற்கான சிறந்த தமிழ் சட்ட நூலுக்கான விருதினை அவருக்கு வழங்குகிறது. இந்த விருதினை 09 .09.2012 அன்று ராணி சீதை ஹாலில் 9.30 மணிக்கு உச்ச நீதிமன்ற , உயர்நீதிமன்ற மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார். அவருக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment