வியாசர்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் நிரோஷா. பிரசவத்துக்காக புளியந்தோப்பில் உள்ள, மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததும், திடீரென மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அவசர சிகிச்சை தேவை என்பதால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, அவரை ஏற்றி கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம், ராயபுரம் நோக்கி சென்றது.புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காவல்நிலையம் அருகே சென்ற போது, திடீரென வாகனத்தின் முன்பக்க ‘டயர்’ வெடித்து, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறியது. சாலை தடுப்பில் மோத முயன்ற நிலையில், ஓட்டுனர் முத்துராமலிங்கம் சாதுர்யமாக, வாகனத்தை நிறுத்தினார். இதில், அவரது கையில் அடிபட்டது. பெண் மருத்துவ உதவியாளர் தலையிலும் அடிபட்டது. அதிர்ஷ்டவசமாக, சிகிச்சைக்கு சென்ற நிரோஷா, பாதிப்பின்றி தப்பினார். சற்று சிக்கல் ஆகியிருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். இதுவே தினமலரில் வந்த பைலட் முத்துராமலிங்கம் பற்றிய செய்தியாகும். இந்த செய்தி வந்த வுடன் உடனடியாக நிர்வாகம் ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இருக்க வேண்டும். ஆனால் உடனே கோவம் கொண்ட எச்.ஆர். அப்பாத்துரை முத்துராமலிங்கத்தை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.அப்பாத்துரையின் இந்த அராஜக செயல்களுக்கு எதிராக இது குறித்து விரைவில் உயர் நீதிமன்றத்தில் முத்துராமலிங்கம் வழக்கு தொடுக்க உள்ளார்.
No comments:
Post a Comment