Friday 30 August 2013

கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் பெரம்பலூரில்

கடந்த 30/08/2013 அன்று கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் பெரம்பலூரில்  மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இதில் பெரம்பலூர்,திருச்சி,கரூர்,நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வரும் 11/09/2013 அன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் மாநிலம் தழுவிய வேலைநிறுத்ததிற்கு முழுமையான ஆதரவு தருவதாக ஒரு மனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் திரு பால் கண்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார்.

மேலும்   பெரம்பலூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இறுதியாக நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக  வளர்ச்சி நிதியை கோவை மண்டல செயலாளர் திரு சுரேஷ்குமார் மற்றும் துணை தலைவர் சத்தியமூர்த்தி அவர்களும் திரு பால் கண்ணன் அவர்களிடம் வழங்கினர். 

No comments:

Post a Comment