Sunday 30 November 2014

"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்

ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் சங்கத்தினர். 
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தக்க பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று கூறி, "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday 17 October 2014

108 AWU (COITU ) விற்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி !

108 AWU (COITU ) அறிவித்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்(17.10.2014) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு11.5%அதாவது ரூ. 4800 வருடாவருடம் கொடுக்க GVK - EMRI நிறுவனம் ஒப்புக்கொண்டது.


108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
அதன் அடிப்படையில் 108 AWU வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

Saturday 9 August 2014

அடக்குமுறைக்கு அஞ்சிடோம்!



108 ஆம்புலன்ஸ் ஊழியரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் ஊழியரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்






108 ஆம்புலன்ஸ் ஊழியரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் ஊழியரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்






108 ஆம்புலன்ஸ் ஊழியரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


Tuesday 21 January 2014

வெற்றிகரமாக நடைபெற்றது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம்

கடந்த 09/01/2013,அன்று திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைவர் தோழர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் தோழர் சிவகுமார் மற்றும் பால்கண்ணன்,பொதுசெயலாளர் தோழர் செந்தில், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.




Thursday 9 January 2014

நமது போராட்ட செய்திகளை மக்களிடம் சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி

நமது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி

நமது வேலை நிறுத்த போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அனைத்து சங்கங்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். தோழர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்த சங்கங்களின் முகவரிகளை தலைமைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம். 

Wednesday 8 January 2014

'108' employees call off strike for now as mgmt agrees to some demands

In a major relief to the state government, the management and employees of the 108 ambulance service arrived at a shaky truce following talks held in the presence of labour department officials in Chennai on Wednesday evening. The employees subsequently called off the strike that was to begin across the state on Wednesday night.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க விளக்கக் கூட்டம்


நடைபெறும் இடம் :

ஸ்ரீ சண்முகா திருமண மஹால் , திருச்சி அரசு  பொது மருத்துவமனை அருகில் , உறையூர் சாலை, திருச்சி

நாள் : 09.01.2014, நேரம் : காலை 11 மணியளவில்

அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். 

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி! பொதுமக்கள் கோரிக்கைக்கு இணங்க ஸ்ட்ரைக் வாபஸ்

இன்று தொழிலாளர் உதவி ஆணையர் (தலைமையிடம்) திரு ஆர். ரவிசந்திரன் முன்னிலையில்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 
 நிர்வாகத்திற்கும் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட  ஒப்பந்தத்தின்படி  நமது தரப்பின் 4 முக்கிய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

 1. மாறுதல் கொள்கை,
 2. விபத்து செலவுகளுக்கு உடனடியாக Rs . 4000/- வழங்குதல் , 
3. தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்ட பால்கண்ணன், திவாகருக்கு திரும்ப வேலை வழங்க ஒப்புக்கொண்டது ,  செல்வம் தேனிக்கு இட மாற்றம் செய்யப்படுவார். 
4.பெண் ஊழியர்களுக்கு  12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.  

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி 
தொழிலாளர் உதவி ஆணையாளர் முன்னிலையில் நிர்வாகத்திற்கும் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் நமது தரப்பின் 4 கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. 


Tuesday 7 January 2014

ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு -108 ஆம்புலன்ஸ் நாளை ஓடுமா?


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர்.தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் பைலட் (ஆம்புலன்ஸ் டிரைவர்) மருத்துவ உதவியாளர்கள் (இ.எம்.டி) மற்றும் கால் சென்டர் ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களை உறுப்பினர்களாக கொண்டு ‘தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம்‘ இயங்குகிறது. இச்சங்கத்தினர், 12 மணி நேர வேலைக்கு பதில் 8 மணி நேரம் வேலை, சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி இரவு 8 மணி முதல், 9ம் தேதி இரவு 8 மணி வரை 24 மணி நேர போராட்டத்தை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

Sunday 5 January 2014

ஜனவரி 9 - ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதிப் படிவம்

காவல் உதவி ஆணையருக்கு




காவல் ஆய்வாளருக்கு



வேலைநிறுத்த அறிவிப்பு (7 பக்கங்கள்)

 2014 ஜனவரி 8 ஆம் தேதி இரவு எட்டு மணி முதல் ஜனவரி 9 ஆம் தேதி இரவு எட்டு மணி வரை மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் தொடர்பாக நமது தொழிற்சங்கம்  தொழிற்தகராறுகள் சட்டப்படி அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் பதிவுத்தபாலில் ​அனுப்பிய வேலைநிறுத்த அறிவிப்பு நகல் (7 பக்கங்கள்) : இதன் நகல் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் பதிவுத்தபாலில் ​அனுப்ப்பட்டுள்ளது

Thursday 2 January 2014

திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நாள் : Jan 01 | 02:16 am


திருவண்ணாமலையில் 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி னர்.
தர்ணாபோராட்டம்
108 ஆம்புலன்ஸ் டிரைவர் கள், மருத்துவ உதவியாளர் கள் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை மண்டல அளவி லான தர்ணா போராட்டம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
தர்ணா போராட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கி பேசினார். மாநில தலை வர் வரதராஜன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.
8 மணிநேர வேலை
ஒருநாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும், அதற்குமேல் செய் யும் வேலைகளுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஆம்பு லன்ஸ் ஓட்டுனர்களுக்கு இணையான ஊதிய ம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் களுக்கும், கிராம சுகாதார செவிலியர் களுக்கு இணை யான ஊதியம் மருத்துவ உதவியாளர்களுக்கும் வழங்க வேண் டும்.
அரசு விடுமுறை நாட்களில் வேலைசெய்தால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 6 மாத காலம் சம்பளத்துடன்கூடிய பிரசவகால விடுப்பு வழங்க வேண்டும், சம்பளத்தில் 12 சத வீதம் வருடாந்திர போனசாக வழங்க வேண்டும். பணியின் போது மரணம் அடையும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
நன்றி தினத்தந்தி நாளிதழ்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

First Published : 28 December 2013 05:27 AM IST
தொழிலாளர் நலச் சட்ட சலுகைகளை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு முறையாக அமல்படுத்தக் கோரி, அந்தத் தொழிலாளர்கள் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் (சிஓஐடியூ) சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கோவை மண்டல செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் வரதராஜன் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, அதிகப்படியான நேரத்துக்கு தனி ஊதியம், அகவிலைப்படி, போனஸ் போன்ற தொழிலாளர் நலச் சட்ட சலுகைகளை முறையாக அமல்படுத்திட வேண்டும்.
அரசு மருத்துவ உதவியாளர்கள், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இணையாக ஊதியம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் வழங்கிடவும், பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் சட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வருகிற ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னிட்டு,
மண்டல அளவில் தர்னா போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 நாமக்கல்லில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு,
திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
நன்றி தினமணி நாளிதழ்.

Employees of 108 service issue warning in Goa

PANAJI: Employees of Goa's emergency services 108 have issued a notice to strike work from January 7, 2014.

The 108 service employees' union under Bhartiya Mazdoor Sangh (BMS), alleged at a press conference in Panaji on Tuesday that the management of emergency management research institute (EMRI) have been treating them badly, and they have been under paid.

Anand Gawde, president of the union, claimed that while they have been made to work for twelve hours, they are paid for only eight hours.

He also said that they are under staffed, and as a result they have to sometimes work without weekly offs.

Gawde also demanded that they should be paid on par with government employees.

The union has handed over a memorandum to chief minister Manohar Parrikar. If our demands are not met, we will stop working; and the government will be responsible for whatever happens, Gawde said. tnn

Wednesday 1 January 2014

108 ambulance workers call one-day state-wide strike on Jan 8


 Dec 25, 2013, 03.52 AM
MADURAI: Around 3,000 personnel of the 108 Ambulance Workers Union has decided to go on a one-day token strike across the state early next month in protest against authorities ignoring their long-pending demands. The strike will commence at 8pm on January 8.

At a press meet held here on Tuesday the office-bearers of the union said their rightful demands have been ignored for several years. Repeated submissions to the government and the GVK Emergence Management and Research Institute (GVK EMRI), the private agency that runs the ambulance service since its launch in 2008, received no response so far, the Union members said.

"Around 620 ambulance vehicles operate throughout the state and 19 in Madurai district. Around 3,000 employees including ambulance drivers, emergency medical technicians and call-centre staff will participate in the one-day token strike to highlight our demands," said K Senthil Kumar, state general secretary of Union.

"On an average each ambulance would attend five calls a day. In Madurai alone, we attend more than 100 patients. We tried to avoid the strike to the maximum extent by conducting peaceful protests and petitioning the authorities. But we are forced to announce the strike as our just demands have not been met all these years," Senthil said.

One ambulance driver, who refused to be identified, said, "We are forced to work for 12 hours for a paltry salary of Rs 6,900 to Rs 7,900. Often, we are made to work 14 to 16 hours without any overtime payment. Now, we are also forced to shift patients from one hospital to another which was hitherto done by hospital drivers in government vehicles. This has increased our workload," he said.

The Union has demanded eight hours of work as per regulations. Salary on par with government drivers, payment for overtime work, good working condition with toilet facility and payment of bonus and dearness allowance are the other demands of the union.

The ambulance personnel would carry out the strike as proposed if our demands are not met, said the union representatives.
thanks times of india.

"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

First Published : 04 October 2013 03:36 AM IST
நாமக்கல்லில் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நிர்வாகத்துக்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் "108'ஆம்புலன்ஸ் திட்டத்தில் 2800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தத் திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் எடுத்து "108' ஆம்புலன்ûஸ இயக்கி வரும் நிறுவனம், தொழிலாளர் நலச் சட்டப்படி எவ்விதச் சலுகையும் அளிப்பதில்லை என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாமக்கல்லில் வியாழக்கிழமை துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் கோவை மண்டலச் செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்துப் பேசியது:
"108' ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் தங்கள் ஊழியர்களை 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வற்புறுத்துகிறது. தொழிலாளர் நலச் சட்டத்தை மீறி கூடுதலாகச் செய்யப்படும் 4 மணி நேர வேலைக்கு எந்தவிதப் பணப் பயனும்
அளிக்கப்படுவதில்லை. ஊழியர்களுக்கு மாதம் ரூ.8000 மட்டுமே வழங்குகிறது. இதைத் தவிர வேறு எந்தப் பஞ்சப் படி, பயணப் படி உள்ளிட்ட சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் நீண்ட தொலைவுக்கு பணியிட மாற்றம், ஊதியப் பிடிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால், அத்தகைய அதிகாரிகள் மீது நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பணி வழங்கப்படாமலும் உள்ளது.
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவே இந்தத் துண்டறிக்கை விநியோகப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
நன்றி தினமணி நாளிதழ்..